For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனுக்கு கோபால் ரூ.5 கோடி எடுத்து சென்றார்: தினகர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக 2 முறை ரூ.5 கோடிப் பணத்தை "நக்கீரன்" கோபால் எடுத்துச் சென்றது100 சதவீத உண்மை என்று கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் கூறினார்.

ராஜ்குமார் எப்படி கடத்தப்பட்டார், பின்னர் அவர் எப்படி மீட்கப்பட்டார், இதற்காக என்ன என்ன நடவடிக்கைகள்எடுக்கப்பட்டன என்பது குறித்து அந்த சமயத்தில் டி.ஜி.பியாக இருந்த தினகர் புத்தகம் எழுதியுள்ளார்.

அதில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கோபால், கிருஷ்ணாவின் மருமகன் உள்ளிட்டோர் குறித்த பல தகவல்களைவெளியிட்டுள்ளார்.

கோபால் மூலம்தான் வீரப்பனுக்குப் பணம் போனதாக தினகர் எழுதியதை எதிர்த்து கோபால் சார்பில் சென்னைஎழும்பூர் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக தினகர் இன்று எழும்பூர் நீதிமன்றம் வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிசாம்பசிவம், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் வெளியே வந்த தினகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோபால் இரண்டு முறை ரூ.5 கோடி பணத்தை எடுத்துச் சென்றது 100 சதவீத உண்மை. இதற்கான அனைத்துஆதாரங்களும் என்னிடம் உள்ளது. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.

என் மீது கோபால் போட்டுள்ளது பொய் வழக்கு. அதனால்தான் அவர் நீதிமன்றத்திற்கே வராமல் இருந்துள்ளார்என்றார் தினகர்.

தினகரின் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரும் இன்று நீதிமன்றத்திற்குவந்திருந்தனர்.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X