For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வீரப்பன் விரைவில் பிடிபடுவான்": கிருஷ்ணா நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக, கர்நாடக அதிரடிப்படைகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாககர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மர்மமானமுறையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு மாநில அதிரடிப்படையினரும் அவனைப் பிடிப்பதற்காககாட்டுக்குள் தீவிர வேட்டையாடி வருகின்றனர்.

மேலும் நாகப்பா சாவு தொடர்பாக இரு மாநிலங்களிலும் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட வீரப்பனின் கூட்டாளிகள்கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணா இன்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில்,

அதிரடிப்படையினர் வீரப்பனை விரட்டிக் கொண்டுதான் உள்ளனர். அவனும் காட்டுக்குள்ளேயே தப்பித்து ஓடிஒளிந்து கொண்டே இருக்கிறான்.

இரு மாநில அதிரடிப்படையினரும் சேர்ந்து தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் அவன் விரைவில்நிச்சயம் பிடிபடுவான்.

வீரப்பன் பிரச்சனையாலும், காவிரிப் பிரச்சனையாலும் கர்நாடக அரசுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை அளிக்கும்போது, காவிரிப் பிரச்சனை முழுவதுமாகத் தீர்ந்துவிடும் என்றார் கிருஷ்ணா.

"வீரப்பன் பிடிபட்டு விட்டான் என்ற நல்ல செய்தியை எப்போது அறிவிப்பீர்கள்?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு,"கவலைப்படாதீர்கள். அவன் பிடிபட்டால் எங்களை விட உங்களுக்குத்தான் அது முதலில் தெரியும்" என்றுபதிலளித்தார் கிருஷ்ணா.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X