இன்று இந்தியா வருகிறார் ரணில்
கொழும்பு:
இந்தியாவுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை தொடர்பானஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்குவருகிறார்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள்வெற்றிகரமாக நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இந்நாட்டில் முழுமையான இயல்பு நிலைதிரும்பியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகையே மாற்றிக் கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பம் துறையில் இந்தியாவுடன்ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு விரும்புகிறது. இன்று மாலை இந்தியாவுக்கு வரும்ரணில், இந்தியத் தலைவர்களுடன் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இந்தியாவுடன் ஒப்பந்தம்செய்துசெய்து கொள்வதற்கு நேற்று இலங்கை அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
மூன்று நாள் பயணமாக இன்று மாலை டெல்லி வந்து சேரும் ரணில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், குஜ்ரால் உள்ளிட்டதலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.