அமெரிக்காவால் செத்தாலும் பழி சதாம் மீது தான்
வாஷிங்டன்:
அப்பாவி ஈராக்கிய மக்களை அமெரிக்கப் படைகள் தவறுதலாகத் தாக்கியதற்கு சதாம் ஹூசேன் தான் காரணம்என அதிபர் புஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இரு நாட்களுக்கு முன் 13 பெண்கள் சென்ற ஒரு கார் மீது அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7பெண்களும் குழந்தைகளும் பரிதாபமாகப் பலியானார்கள். இதற்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் நேற்றும் அப்பாவிகள் சென்ற ஜீப் மீது அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்கியதில் 15 பேர்பலியாயினர். இதற்கு சதாம் ஹூசேன் தான் காரணம் என அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். வெள்ளைமாளிகை அதிகாரியான ஆரி பிஸ்ஸெர் கூறுகையில்,
அப்பாவி மக்கள் பலியானதற்கு அதிபர் புஷ் கவலை தெரிவித்துள்ளார். ஆனால், இதைவிட அதிகமானஅப்பாவிகள் சதாம் ஹூசேனால் கொல்லப்பட்டுள்ளனர். இப்போதைய சாவுகளுக்கும் கூட சதாம் தான் காரணம்.
பெண்கள் சென்ற வேன் மீது அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து நான் பதில் சொல்ல முடியாது.பாதுகாப்புத்துறை விசாரித்து வருகிறது. ஈராக்கிய மக்களின் உள்ளங்களை அமெரிக்க வீரர்கள் வென்றுவருகின்றனர். இதை அதிபர் புஷ் மட்டுமல்ல எல்லோருமே அறிவார்கள் என்றார்.
-->