For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு

By Super
Google Oneindia Tamil News

கொழும்பு:

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் விலகும் புலிகளின் முடிவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு அளித்த உறுதிமொழிகள் எதுவும் முழுமையாகநிறைவேற்றப்படவில்லை. இதனால் அடுத்த சுற்று தாய்லாந்து பேச்சுவார்த்தையையும், ஜப்பான் நிதியுதவிமாநாட்டையும் புலிகள் புறக்கணிக்க உள்ளனர்.

இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அந் நாட்டுத் தூதர் ஆஸ்லே வில்லிஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தீவிரவாதத்தைக் கைவிட்டு புலிகள் இயக்கம் உடனே அமைதிப் பேச்சுக்குத் திரும்ப வேண்டும். ஜூன் மாதம்டோக்கியோவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். பேச்சுவார்த்தைநிறுத்தப்பட்டாலும் கூட போர் நிறுத்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை புலிகளும் இலங்கை அரசும்மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறியதாக புலிகள் கூறுவது சரியல்ல. அரசு மீது எவ்வளவு தவறுகள்உள்ளவோ அதைவிட அதிகமான தவறுகள் புலிகள் தரப்பிலும் உள்ளது. அரசியல் எதிரிகளைக் கொல்வது,முஸ்லீம்களை தொல்லைப்படுத்துவது, வரி விதிப்பது, கடற் புலிகளின் தாக்குதல்கள், படையில் சிறுவர்களைசேர்ப்பது போன்ற புலிகளின் செயல்கள் நல்லது அல்ல.

இலங்கையில் இருந்த அரசுகள் அடுத்தடுத்து பல தவறுகளைச் செய்தன என்பது உண்மை தான். ஆனால்,தவறுகளை எடைபோட்டுப் பார்த்தால் புலிகள் மீது தரப்லில் அதிக பாரம் இருக்கும்.புலிகளின் தீவிரவாதம்காரணமாக வட கிழக்குப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அமைதி இல்லை. லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

அமெரிக்கத் தூதரின் அறிக்கையில் புலிகளையே குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முக்கிய குழுவிலிருந்து புலிகள் விலகல்:

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து இரு தினங்களுக்கு முன் விலகிய விடுதலைப் புலிகள் இப்போதுமனிதாபிமானத் தேவைகளுக்கான மறுசீரமைப்புக் கமிட்டியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதில் புலிகள், இலங்கை அரசு தவிரநார்வே அமைதிக் குழுவினரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மனிதாபிமானத் தேவைகள் கமிட்டிக்குஜப்பானிய அமைதித் தூதர் யசுஷி அகாஷி ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளில் நாங்கள் பங்கேற்பது என்பது முழுக்க முழுக்க இலங்கை அரசின் கைகளில்தான் உள்ளது என்றும் புலிகள் கூறியுள்ளனர். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டவிஷயங்களை காலம் தாழ்த்தாமல் அரசு அமலாக்க வேண்டும்.

அதைச் செய்தால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது என புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக மனிதாபிமான தேவைகளுக்கானகமிட்டியின் இலங்கை அரசுப் பிரதிநிதி பெர்னார்ட் குணதிலகேவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அதில், இனப் போரால் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் குடியேறச் செய்வது மிகஅவசியமான, அவசரமான தேவையாகும். அதற்கு முதலில் வட-கிழக்குப் பகுதியை சீரமைத்தாக வேண்டும்.இதற்குத் தேவையான நிதியை உடனே நன்கொடையாளர் நாடுகளில் இருந்து வசூலிக்கும் முயற்சிகளை அரசுமேற்கொள்ள வேண்டும்.

ஓஸ்லோவில் கடந்த ஆண்டு நவம்பரில் வட-கிழக்குப் பகுதிகளை சீரமைக்க நிதியுதவி அளிக்க முன் வந்தநாடுகளிடம் இருந்து நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X