தனி நீதிமன்றத்தின் ஆயுள் முடிகிறது: நீட்டிப்பு தருமா தமிழக அரசு?
சென்னை:
அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தின் ஆயுட்காலம் இந்த மாத இறுதியுடன்முடிவடைகிறது. இதற்கு கால நீட்டிப்பு கொடுக்கப்படுமா என்பது குறித்து அரசு இதுவரை ஏதும்அறிவிக்கவில்லை.
பின்னர் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 2 தனி நீதிமன்றங்களுக்கு மூடு விழா நடந்தது.ஒன்றே ஒன்று மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது.
தற்போது செயல்பாட்டில் உள்ள முதலாவது தனி நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிமீதான சத்துணவு ஊழல் வழக்கு, லண்டனில் ஹோட்டல் வாங்கியதாக ஜெயலலிதா மீதுள்ள வழக்கு,ஸ்பிக் நிறுவன பங்குகளை வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகள் விசாரணையில்உள்ளன.
இந் நிலையில் இந்த நீதிமன்றத்தின் ஆயுள்காலமும் முடிவடையப் போகிறது. இதற்கு நீட்டிப்புதரப்படாவிட்டால் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியாக வேண்டும்.
பெரும்பாலும் நீட்டிப்புத் தரப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.