For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலை வாய்ப்பில்லாத 50 சதவீத பொறியியல் பட்டதாரிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சிங்கிள் விண்டோ மூலம் நிரப்ப ஒதுக்கப்பட்டுள்ள 55,000 பொறியியல் கல்லூரிஇடங்களுக்கு நேற்று மாலை வரை வெறும் 40,000 மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர்.இதனால் இந்தப் பிரிவில் மட்டும் 15,000 இடங்கள் காலியாகக் கிடக்கவுள்ளன.

இதற்கு முக்கியக் காரணமே பொறியியல் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைதலைகீழாக மாறிவிட்டது தான் என்கின்றனர் கல்வித்துறை ஆராய்ச்சியாளர்கள். தமிழக உயர் கல்விவாரியம் இ தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

அதில், ஒரு வருடத்திற்கு முன்பு பொறியியல் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களில் 50சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு இல்லாமல் சும்மா இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

வேலையில் சேர்ந்துள்ளவர்களில் கூட பெரும்பாலானவர்கள் படித்த படிப்புக்கும் சம்பந்தமேஇல்லாத வேலைகளைத் தான் பார்த்து வருகின்றனர்.

சிவில், மெக்கானிக்கல் துறை மாணவர்கள் தான் அதிக அளவில் வேலையின்றி உள்ளனர். அடுத்தநிலையில் எலெக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ், மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள்உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X