காயிதே மில்லத் பிறந்த நாள்: ஜெ, ஸ்டாலின் அஞ்சலி
சென்னை:
காயிதே மில்லத் என்று அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது இஸ்மாயில் சாஹிப்பின் 108-வதுபிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுகதுணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மலர்ப் போர்வை சார்த்தி அஞ்சலிசெலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா மலர்ப் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம்,பொன்னையன் உள்ளிட்ட அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஸ்டாலின்,பரிதி இளம்வழுதி, தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள் மலர்ப்போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் பிற தலைவர்களும் காயிதே மில்லத்நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கண்ணியம் மிக்க காயிதே மில்லத் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் மதசார்பின்மையின்அடையாளமாகத் திகழ்ந்தார். தமிழர்கள் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி அனைத்து மதத்தினரும்இணைந்து வாழ வேண்டும் என வலியுறுத்தியவர் அவர்.