For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், ஈரோடு நகரில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றிலிருந்துதான் ஈரோடு நகருக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. கடும் கோடைவெப்பம் காரணமாகவும், மழை இலலாத காரணத்தாலும் காவிரி ஆறு வறண்டு விட்டது.

இதனால் நகரில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழாய்களில் குடி தண்ணீர்வந்து பல நாட்கள் ஆகிவிட்டன.

காவிரியில் தண்ணீர் சுரப்பு அதிகம் உள்ள ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியிலும்நிலத்தடி நீர் வற்றி விட்டது. இதனால் அங்கிருந்தும் தண்ணீர் எடுக்க முடியவில்லை.

ஈரோடுக்கு வெளியே இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுவினியோகிக்கப்படுகிறது. அதுவும் போதுமான அளவுக்கு இல்லை.

குடிநீர் இல்லாத காரணத்தால் ஈரோடு மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். குடங்களுடன்தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர்.

இந் நிலையில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பணைகட்ட முடிவு செய்யப்பட்டு நேற்று அந்தப் பணிகள் தொடங்கின. ரூ. 6 லட்சம் செலவில் இந்ததடுப்பணை கட்டப்படவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X