For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் குறையவில்லை அனல் காற்று: வெயில் கொளுத்துகிறது

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

கோடை காலம் முடிந்துவிட்ட பின்னரும் கூட சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட பகுதிகளில்அனல் காற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. மேலும் 2 நாட்களுக்கு அனல் நீடிக்கும் நிலை உள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரம் முடிந்துவிட்ட பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது, அனல் காற்று வீசிவருகிறது. தென் மேற்கு பருவமழை காலதாமதம் ஆகியிருப்பதன் விளைவாகவே இந்த அனல் காற்று வீசுவதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

அரக்கோணத்தில் 110 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது, சென்னை நகரில் நேற்றைய வெப்பநிலை 108டிகிரி பாரன்ஹீட். அடுத்தபடியாக கடலூரில் 104 டிகிரி வெயில் அடித்தது.

ஆனால், தென் மாவட்டங்களிலும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பம் தணிந்து வருகிறது.

கேரளத்தில் மழை ஆரம்பம்:

இதற்கிடையே கேரளத்தில் தென் மேற்குப் பருவ மழை துவங்கிவிட்டது. எப்போதும் இல்லாத வகையில் ஒரு வாரகாலம் தாமதமாக இந்த மழை தொடங்கியுள்ளது.

இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்ளிலும் கர்நாடகத்திலும் இன்னும் இரு நாட்களில் மழை பெய்யஆரம்பிக்கும் என டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X