For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடல் நீரை குடிநீராக்கி சென்னைக்கு வழங்க மலேசியா திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகருக்கு, கடல் நீரைக் குடிநீராக்கி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மலேசிய அரசு தயாராகஉள்ளதாக என்று அந் நாட்டுத் தொழில்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு கூறியுள்ளார்.

சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை நகருக்குத் தேவையானகுடிநீரை, கடல் நீரிலிருந்து எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இத் திட்டத்தில் மலேசிய அரசுக்கு உள்ள அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முன் வந்துள்ளது.

சென்னை நகரில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான செயல் திட்டம் தயாராகி விட்டது. அதை தமிழகஅரசிடம் சமர்ப்பித்துள்ளோம். எந்த இடத்தில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை தமிழக அரசுதான்முடிவு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X