அரிசிக் கூப்பனுக்காக தலையாரி வெட்டிக் கொலை
திருச்செந்தூர்:
ரேஷன் கார்டுக்கான அரிசிக் கூப்பன் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கிராம தலையாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அப்போது அவரது பெயர் பட்டியலில் இல்லை என்றும், அரிசிக் கூப்பன் வழங்க முடியாது என்றும் கிராம நிர்வாகஅதிகாரி முத்து ஆதித்தன் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பலவேச முத்து அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பலவேச முத்துவை கிராம நிர்வாக அதிகாரி திட்டவே, பலவேச முத்துவின் மகன்களும் தந்தைக்குஆதரவாக வந்து வாக்குவாதம் செய்தனர்.
அப்போது தலையாரி முனியசாமி அங்கு வந்து சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அவர் மீது கோபம்கொண்ட பலவேச முத்து, தலையாரியை சரமாயாக தாக்கியுள்ளார்.
அவரது மகன்களும் சேர்ந்து அரிவாள்களால் தலையாரியை வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில்முனியசாமி அங்கேயே பலியானார்.
மெய்ஞ்ஞானபுரம் போலீஸார் இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.