For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கிணற்றில் இறங்கிய 3 பேர் அடுத்தடுத்து பலி: விஷ வாயு தாக்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில், கிணற்றுக்குள் இறங்கிய 3 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாகஇறந்தனர்.

இன்று காலை மடிப்பாக்கத்தில் இச் சம்பவம் நடந்தது. மடிப்பாக்கம், எல்.ஐ.சி. காலனி பகுதியில் கிருஷ்ணமூர்த்திஎன்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்குத் தேவையான தண்ணீரை வீட்டுக்கு அருகேஇருந்த கிணற்றிலிருந்து எடுத்தனர்.

அந்தக் கிணறு நீண்ட காலமாக உபயோகப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்தக் கிணற்றில் கிருஷ்ணமூர்த்திதண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தபோது கயிற்றில் இருந்து கழன்று வாளி உள்ளே விழுந்துவிட்டது. இதையடுத்துஅதை எடுக்க கிருஷ்ணமூர்த்தி உள்ளே இறங்கினார்.

அப்போது கிணற்றில் இருந்த விஷ வாயு அவரைத் தாக்கியது. இதனால் அவர் மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார்.அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாகக் கருதிய அவரது தம்பி குமரப்பன் உடனே கிணற்றில் இறங்கினார்.ஆனால், அவரும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்து நீரில் மூழ்கினார்.

இதையடுத்து வீடு கட்ட வந்த கொத்தனாரான ஜெகன்நாதன் என்பவர் இவர்களை மீட்க கிணற்றில் இறங்கினார்.அவரையும் விஷ வாயு தாக்கியது. அவரும் மயங்கி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

அப்போது தான் கிணற்றில் விஷ வாயு இருப்பது தெரியவந்தது. இதனால் மேற்கொண்டு யாரும் கிணற்றில்இறங்கி இவர்களை மீட்க முன் வரவில்லை. உடனே தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது.அவர்களும் விரைந்து வந்தனர். உடனடியாக கிணற்றுக்குள் ஆக்சிஜனைச் செலுத்தினர்.

ஆனால், அதற்குள் மூவருமே இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்களது உடல்களைத் தான் தீயணைப்புப்படையினரால் மீட்க முடிந்தது.

சில நிமிடங்களில் அடுத்தடுத்து இந்த மூன்று சாவுகளும் நடந்துவிட்டன. இச் சம்பவம் மடிப்பாக்கம் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X