போதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்?
சென்னை:
சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்த இலங்கையைச் சேர்ந்தசூரி என்ற சூரியசேகரனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இருவரும் சென்னை போதைத் தடுப்பு அலுவலகத்தில் விசாரணைக்காக இரவில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால், அதிகாரிகளின் காவலில் இருந்தபோது, விசாரணை என்ற பெயரில் சூரி கடுமையாக தத்கப்பட்டதாகவும்இதில் தான் சூரி இறந்ததாகவும் அவரது சகோதரி தவமலர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள்ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, சூரியின் உடலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, தவமலரின் சார்பில் ஒரு டாக்டரும் உடன் இருக்கலாம். பிரேதப்பரிசோதனையை வீடியோவில் படமெடுக்கப்பட வேண்டும்.
பரிசோதனைக்குப் பின்னர் உடல், தவமலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- போதை தடுப்பு அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை: மனித உரிமை ஆணையத்தில் தங்கை புகார்
- போதை தடுப்பு அலுவலகத்தில் கைதி தற்கொலை