போப் ஜான் பால் மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை:
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த, புனித போப் ஜான் பால்மீது முதல்வர் ஜெயலலிதா கடுமையாகப் பாய்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் தலையிட கிறிஸ்தவரானபோப்பாண்டவருக்கு எந்தவித தகுதியும், அதிகாரம் கிடையாது என காட்டமாகக் கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்திலும் குஜராத்திலும் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தை கடந்த 3ம் தேதி வாடிகன் சிட்டியில்அமர்ந்து கொண்டு ஜான் பால் விமர்சித்துள்ளார்.
இரண்டாம் போப் ஜான் பால் மதத் தலைவராக இருக்கலாம். ஆனால், அடுத்த நாட்டின் சட்டத்தை விமர்சிக்கஅவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்டாய மதமாற்றத்தைத் தடுத்து தான் சட்டம் கொண்டு வந்தோம். இதனால்யாருடைய மதச் சுதந்திரமும் பறிக்கபடவில்லை.
கடந்த ஜூன் 3ம் தேதி வாட்டிகன் சிட்டி தேவாலயத்தில் உரையாற்றிய போப், தமிழகத்திலும் குஜராத்திலும்கொண்டு வரப்பட்ட மத மாற்றத் தடைச் சட்டங்களால் மதச் சுதந்திரம் பறி போவது குறித்து கவலைதெரிவித்திருந்தார்.
இதைத் தான் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் ஜெயலலிதாவை கன்னி மேரி உருவத்தில் அதிமுகவினர் சித்தரிக்க, அதை எதிர்த்து தமிழகம்முழுவதும் கன்னி மேரிக்கு பாவம் நீக்கும் பிரார்த்தனைகள் நடந்தன. அதிலிருந்தே கிருஸ்வத அமைப்புகளுக்கும்ஜெயலலிதாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.