காந்தப் படுக்கையில் விபச்சாரம்: டிவி நடிகைகள் கைது
சென்னை:
காந்தப் படுக்கையில் விபச்சாரம் செய்த டிவி நடிகைகள் கைது செய்யப்பட்டனர்.
-->சென்னை தி.நகர், மேற்கு மமாம்பலம் பகுதிகளில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஹை-டெக் விபச்சாரம்நடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரிய கவுடர் ரோடு- சக்கரபாணி தெரு சந்திப்பில் ஒரு வீட்டிலும் தி.நகர் ஈஸ்வரன் கோவில்தெருவிலும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் டிவி நடிகைகள் மற்றும் சிலர் விபச்சாரம் நடத்துவதுஉறுதியானது.
ஆர்யகவுடர் தெரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தெலுங்கு நடிகை லட்சுமி, டிவி நடிகைகளான அருணா,அனுராதா, கீதா ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்களுடன் குஜாலாக இருக்க வந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதே போல தி.நகர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமுதா (வயது 23) என்ற பெண் பிடிபட்டார். இந்தப்பெண்ணையும் மேலும் சில டிவி நடிகைகளையும் வைத்து தொழில் நடத்திய டிவி நடிகரான சாய்ராம் என்பவரும்கைது செய்யப்பட்டார். சாய்ராம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கீதாஞ்சலி உட்பட பல சீரியல்களில்நடித்துள்ளார்.
இந்த வீடுகளில் சோதனை நடத்தியபோது காந்தப் படுக்கைகள் இருப்பது தெரியவந்தது. காந்தப் படுக்கையில்உல்லாசமாக இருக்க தனி ரேட் வசூலித்துள்ளனர் இந்த நடிகைகள்.
காந்தப் படுக்கையில் உறங்கினால் செக்ஸ் செயல்பாடு அதிகரிக்கும் என்று சொல்லி கோடிக்கணக்கில்சென்னையில் மோசடி நடந்தது. இந் நிலையில் இந்தப் படுக்கைகளை வைத்து விபச்சாரமும் நடந்துள்ளதுபோலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-->