ரயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை: காதலி விஷம் குடித்து தற்கொலை
வத்தலகுண்டு:
காதலில் தோல்வியடைந்த வழக்கறிஞரும், அவரது காதலியான மாணவியும் தனித்தனியேதற்கொலை செய்து கொண்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் வக்கீல் வெங்கடகிருஷ்ணன். இவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரிமாணவி பிரியா என்ற கிருஷ்ண பிரியாவும் காதலித்து வந்தனர். பிரியா மதுரையில் படிக்கவந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
ஆனால் இவர்களது காதலுக்கு பிரியாவின் வீட்டினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் காதலர்கள் சோகமடைந்தனர். இருவரும் வத்தலகுண்டுக்கு வந்தனர். அங்கு கணவன்,மனைவி என்று கூறி லாட்ஜில் அறை எடுத்தனர்.
பின்னர் லாட்ஜை விட்டு தனியே வெளியே வந்த வெங்கடகிருஷ்ணன், ரயில் நிலையம் அருகேரயில் முன் பாய்ந்து வெங்கடகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
அதே நேரத்தில் லாட்ஜ் அறையில் விஷம் குடித்து பிரியா தற்கொலை செய்து கொண்டார்.
காதலர்கள் இருவரும் ஒரே ஊரில் தனித்தனியாக தற்கொலை செய்துகொண்டது வத்தலகுண்டுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->