மனைவி மீது சந்தேகம்: மாடியிலிருந்து குதித்த கணவர் பலி
சென்னை:
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட ஆந்திர வாலிபர் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். பந்தல்துணியில் போலீஸார் அவரை பிடித்தும் தரையில் மோதி பலியானார்.
ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சிரஞ்சீவி. நகை செய்யும் தொழில் செய்து வந்த சிரஞ்சீவிக்கு மூன்றுகுழந்தைகள் உள்ளனர். மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறுநடந்து வந்தது. சிரஞ்சீவி மனநோயாளி ஆனார்.
வெறுப்படைந்த பத்மா கணவரை விட்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் சிரஞ்சீவி தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்தார். நேற்று நெல்லூர் விஜயமகால் கேட் அருகே உள்ள ஐந்து மாடி காம்ப்ளக்ஸ் மீது சிரஞ்சீவிஏறினார்.
ஐந்தாவது மாடி மீது நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக சத்தம் போட்டார். பதட்டமடைந்த பொதுமக்கள்போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேசிப் பார்த்தனர்.
ஆனால், ஐந்து மணி நேரம் பேசியும் பலனில்லை. இதையடுத்து ஒரு போலீஸ்காரர் மாடிக்கு ஏறினார். அப்போதுஅவர் குதிக்க வாய்ப்பிருந்தால் அவரை அந்தரத்திலேயே பிடிப்பதற்காக ஷாமியானா பந்தலை போலீஸார்விரித்துப் பிடித்தனர்.
போலீஸ்காரர் தன்னை நெருங்குவதை பார்த்த சிரஞ்சீவி கீழே குதித்தார். பந்தலில் விழுந்த அவர் அதைக் கிழித்துக்கொண்டு தரையில் மோதினார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிரஞ்சீவியை போலீஸார்மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலன்றி சிரஞ்சீவி இறந்தார். கண் எதிரில் ஐந்தாவது மாடியில் இருந்து ஒரு மனிதன் கீழே குதித்துஇறந்தது பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.