For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இன்னாசிமுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடியும்முன் பதவி விலகிவிட்ட சென்னை பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர் இவர் ஆவார்.

இதற்கு முன் கடந்த 1998ம் ஆண்டு பி.டி.மனோகரன் தனது பதவியை பாதியிலேயே ராஜினாமா செய்தார்.

இன்னாசிமுத்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகன் ராவுக்குஅனுப்பினார். அதை ஆளுனர் ஏற்றுக் கொண்டு உடனடியாக அவரை பதவியிலிருந்து விடுவித்துவிட்டதாககவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இன்னாசிமுத்து மீது பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழங்கிய நிதியை முறைகேடு செய்தது உள்பட சிலபுகார்கள் உள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், போப்பாண்டவர் மீதான முதல்வர் ஜெயலலிதாவின்விமர்சனத்தால் மன வருத்தமடைந்த இன்னாசிமுத்து தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவருக்குநெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X