For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி காலரா சாவு 12 ஆனது: 8 சிறுவர்கள் சேலம் மருத்துவமனைக்கு மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பரவியுள்ள காலராவுக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் நடுப்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட 60 கிராமங்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளன. தென்பென்னையாற்றிலிருந்து கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம், இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்தத் தண்ணீல் அசுத்தம் கலந்ததால், குடிநீர் கெட்டுப் போய் காலரா பரவியது. இதனால் வாந்தி, பேதியால் சுமார்1,200 பேர் பாதிக்கப்பட்டனர். முதலில் 33 கிராமங்களுக்குப் பரவிய காலரா பின்னர் 60 கிராமங்களுக்குப்பரவியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையிலும், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசரமருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் வரை 6 பேர் இறந்திருந்தனர். நேற்று மேலும் 3 பேர்இறந்தனர். இன்று மேலும் ஒருவர் இறந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

காலராவால் பாதிக்கப்பட்ட 8 சிறுவர்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட கிராமங்களையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சித்திக் நேரில் பார்த்து வருகிறார்.

இதற்கிடையே, பெங்களூரிலிருந்து வெளியேறும் கழிவுகளால் தான் தென் பென்னையாற்று நீர் கெட்டுப் போய்விட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தர்ம்புரி அருகே அசுத்த நீரால் காலரா: 5 பேர் பலி: 700 பேர்மருத்துவமனையில் அனுமதி

தர்மபுரி அருகே வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு: மருத்துவக் குழுக்கள் விரைந்தன

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X