நெட் மூலம் முளைத்த காதல்: 17 வயது இளம் பெண் காதலனுடன் ஓட்டம்
திருச்சி:
இன்டர்நெட் சாட் மூலம் காதலில் விழுந்த 17 வயதே ஆன மாணவி தனது இரண்டாவது முறையாக காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
சென்னை மாநகராட்சியில் உதவி ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்றவர் அப்துல் ரகீம். இவர் இப்போதுகுடும்பத்துடன் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வசித்து வருகிறார். இவரது மகள் ஷகீலா பானு (வயது 17).
சமீபத்தில் பிளஸ் டூ பரிட்சை எழுதி தோல்வியடைந்தார். சாட்டிங் செய்யும் பழக்கம் உள்ள ஷகீலாவுக்குநெட் மூலம் ஒரு காதலன் கிடைத்தார். அவரது பெயர் சதீஷ். சொந்த ஊர் குடியாத்தம். சென்னையில் ஒருபிரவுசிங் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.
வேலையோடு வேலையாக சாட்டிங் செய்வது இவர் வேலை. இருவரும் நண்பர்களாகப் பழகிகாதலர்களாகினர். போட்டோக்களை அனுப்பி பார்த்துக் கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போனது.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன் திருச்சிக்கு வந்தார் சதீஷ். திருமணம் செய்து கொள்வதற்காக இருவரும்சென்னைக்குச் சென்றனர். இதையறிந்த ஷகீலாவின் பெற்றோர் சென்னைக்கு விரைந்து சதீஷையும்ஷகீலாவையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
17 வயது தான் ஆவதால் இப்போது திருமணம் செய்ய முடியாது. அடுத்த வருடம் நாங்களே திருமணம்செய்து வைக்கிறோம் என்று கூறி ஷகீலாவை அழைத்து வந்தனர்.
ஆனால், ஷகீலாவுக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதையறிந்த ஷகீலா, சதீஷைத்தொடர்பு கொண்டு தகவல் தர இரு வாரங்களுக்கு முன் திருச்சி வந்த அவர் ஷகீலாவை மீண்டும் அழைத்துக்கொண்டி ஓடிவிட்டார்.
மைனர் பெண்ணான தங்களது மகளை சதீஷ் கடத்திச் சென்றுவிட்டதாக இப்போது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. விரைவில் சதீஷ் கைதாகலாம்.
-->