பூசாரியை அடித்துக் கொன்ற சிறுவர்கள்
நாகப்பட்டிணம்:
கோவில் முன், கிட்டி விளையாடுவதை தடுத்த பூசாரியை 14 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் சேர்ந்துஅடித்துக் கொன்றுள்ளனர்.
நாகப்பட்டனம் மாவட்டம் குரவலூர் கிராமத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. இந்த ஊரில் உள்ளஅம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தவர் குஞ்சிதபாதம். இவர் ஜூன் 1ம் தேதி கோவில் அருகே கொலையுண்டுகிடந்தார்.
மண்டையில் கம்பால் அடிக்கப்பட்ட ரத்தக் காயமும், கழுத்து நெரிக்கப்பட்ட தழும்பும் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தனர். கோவிலில் கொள்ளையடிக்க வந்தவர்கள் தான்அவரைக் கொன்றிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.
ஆனால், கோவில் பெரிய அளவில் பணமோ, நகையோ இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து தனிப்பட்டவிரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்று விசாரணை நடந்தது.
பூசாரியின் கழுத்தில் நெறிக்கப்பட்ட தழும்பை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள், நைலான் கயிற்றுத் தடத்துடன்,சிறுவர்களின் கைத்தடமும் இருப்பதை போலீசாருக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ஊர் சிறுவர்கள் குறித்து விசாரணை நடந்தது. அப்போது தான் மணிகண்டன், சங்கர் ஆகியஇரு சிறுவர்கள் மீது சந்தேகம் வந்தது.
அவர்களை போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இருவரும் கோவில் முன் உள்ள காலி நிலத்தில் கிட்டி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதை பூசாரிதடுத்தாகவும், இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கிட்டிக் கம்பால் பூசாரியை சரமாரியாக அடித்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதில் மண்டை உடைந்து கீழே விழுந்த பூசாரியை அங்கே கீழே கிடந்த நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக்கொன்றதாகவும் தெரிவித்தனர்.
இரு சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.