For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை அருகே பாறையில் மோதி ரயில் கவிழ்ந்தது: 23 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கார்வார்:

கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த சிறப்பு ரயில், தண்டவாளத்தில் கிடந்தபாறையில் மோதில் கவிழ்ந்தது. இதில் 23 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்றிரவு 10.30 மணியளவில் மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சுரங்கப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் கிடந்த பாறையில் மோதிய இந்த ரயிலின் 3 பெட்டிகள் கவிழுந்துஉருண்டன.

அந்தப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அங்கு நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டுதண்டவாளத்தில் விழுந்தன. இதில் ஒரு பாறையில் தான் ரயில் மோதியது.

கோடை கால சிறப்பு ரயிலான இந்த ரயில் கொங்கன் ரயில்வேயால் இயக்கப்பட்டது.

இந்த விபத்தில் பலியானவ 23 பேரில் 3 பேர் குழந்தைகள், 4 பேர் பெண்கள். கொங்கன் ரயில் பாதையில்நடந்துள்ள முதல் மிகப் பெரிய விபத்து இதுவேயாகும்.

காயமடைந்த 25 பேரில 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. இதில் ரயிலின் 2டிரைவர்களும் அடங்குவர்.

இந்த விபத்தையடுத்து மும்பை-கோவா இடையிலான ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை பிகாரிலும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டது. முங்கர் மாவட்டம் தஸ்ரத்பூர் ரயில் நிலையம்அருகே பராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதில், யாரும் காயமடையவில்லை.

இந்த இரு ரயில் விபத்துக்கள் குறித்தும் ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X