ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: அரசு டாக்டர்கள் அறிவிப்பு
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என அரசுடாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இச் சங்கத்தின் தலைவர் கே.பிரகாசம், செயலாளர் முத்துராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜூலை 2ம் தேதி முதல் தொடங்கும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை.தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிலைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில் அரசு டாக்டர்கள் நடத்திய போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியதுநினைவுகூறத்தக்கது. டாக்டர்களின் எந்தக் கோரிக்கையையும் ஏற்காமலேயே அவர்களைப் பணியச் செய்ததுஅரசு.
இந் நிலையில் மீண்டும் அரசின் கோபத்துக்கு ஆளாக அரசு டாக்டர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே அரசு ஊழியர்களின் போராட்டத் திட்டத்தை வாபஸ் பெறச் செய்ய அவர்களுடன் பேச்சு நடத்தஅரசு முன் வந்துள்ளது.