For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணி மேரிக் கல்லூரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு பதில் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை

கடலோர பகுதிகளில் உள்ள புராதனக் கட்டடங்களை இடிப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதித்துள்ளதடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சார்பில் இன்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராணி மேரிக் கல்லூயை இடித்து விட்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டதை எதிர்த்துபெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், கடலோரப் பகுதிகளில் ரூ. 5 கோடிக்கு மேலான திட்டப்பணிகளுக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று அத் துறையின் திமுக அமைச்சர்டி.ஆர். பாலு உத்தரவை வெளியிட்டார்.

இதை எதிர்த்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அந்த மனுவில், பாலுவின் உத்தரவு அரசியல் உள்நோக்கம் கொண்டது, தன்னிச்சையானது,சட்டவிரோதமானது என்று கூறிய தமிழக அரசு, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியது.

இதையடுத்து இடைக்காலத் தடை விதித்தார் நீதிபதி. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையடுத்துதடை நீக்கப்பட்டது. அதே நேரத்தில் பாலுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபிபப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ராணி மேரிக் கல்லூரியை மனதில் வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கடலோர கட்டடங்களைஇடித்து விட்டு புதிய கட்டடங்களை எழுப்ப அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள்கோரிக்கை விடுத்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவுமே இல்லை என்றுகூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X