விதவைகளுக்கு பெங்களூர் தமிழ் சங்கம் மறுமணம்
பெங்களூர்:
கணவர்களை இழந்த மனைவிமார்களுக்கும், மனைவிகளை இழந்த கணவர்களுக்கும் பெங்களூர் தமிழ் சங்கம்சார்பில் மறுமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது.
பெங்களூர் தமிழ் சங்க செயலாளர் தி.கோ.தாமோதரன் கூறுகையில், பெங்களூர் தமிழ் சங்கம் திருமண மேடைஎன்ற நவீன சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தமிழ் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஐந்து பேருக்கு தமிழ்சங்க செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 6,13 ஆகிய நாட்களில் நடக்கும் நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில் வசதியற்ற ஏழைகளுக்கு தமிழ் சங்கதிருமணம் செய்து வைக்கும், இலவச திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் தமிழ் சங்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
ஜூலையில் நடக்கும் நவீன சுயம்வரத்திற்கு பெயர் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விவாகரத்து பெற்றவர்கள்,கணவனை இழந்தவர்களுக்கும் ஜூலை 13ல் சுயம்வர நிகழ்ச்சியில் திருமணம் நடத்தப்படுகிறது என்றார்.
சங்கம் நடத்தும் திருமணங்கள் தமிழ் முறைப்படி நடக்கும் என்று மணமேடை பொறுப்பாளர் இராசுமாறன்கூறினார்.
விபரங்களுக்கு தமிழ்சங்க செயலாளர், 59, அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர்-52. என்ற முகவரியிலும்5510062 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.