For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதாள அறையில் அழகிகளை வைத்து விபச்சாரம்: நடத்தியவர் பஞ்சாயத்துத் தலைவர்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள லாட்ஜில் பாதாள அறை அமைத்து, அதில் அழகிகளை வைத்து விபச்சாரம்நடத்திய லாட்ஜின் உரிமையாளர் சுரேஷ்குமார், ஒரு பஞ்சாயத்துத் தலைவராவார்.

குடியாத்தம் அருகே குள்ள சோளிங்கர் அருகே உள்ள மூங்கில்வாடி பஞ்சாயத்தின் தலைவராக அவர் உள்ளார்.அண்ணாசாலை பூதப் பெருமாள் கோவில் அருகே உள்ள கம்பர்ட் ஸ்டே என்ற இந்த லாட்ஜை குத்தகைக்கு எடுத்துநடத்தி வந்துள்ளார்.

Comfortstay Hotel

பாதாள அறைக்கு செல்லும் வழி
இப்போது தலைமறைவாகிவிட்ட சுரேஷ்குமாரையும் அவரது மேனேஜரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று பிடிபட்ட அழகிகள் 4 பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது,அவர்களது பெயர் விவரம்:

விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஜோதி (23), விஜயவாடாவைச் சேர்ந்த விஜயகுமாரி (24), தேவி (21), விஜயா (19).இவர் தவிர இந்தப் பெண்களை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்த ஒரு கிழவியும் பிடிபட்டார்.

அதே போல இவர்களுடன் உல்லாசமாக இருக்க வந்துக் கைதானவர்களில் இருவர் கப்பல்களின் கேப்டன்களாவர்.இலங்கையில் இருந்து சென்னை வந்த கப்பலில் இவர்கள் வந்துள்ளனர். மேலும் ஒரு வெளிநாட்டுக்காரரும்பிடிபட்டார்.

இவர்கள் தவிர புரோக்கர்கள், அழகிகளுக்கு ஆட்களை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் என மொத்தமாக 14பேர் கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது. இவர்கள் அனைவரும் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Girls in Comfortstay Hotel

பிடிப்பட்ட அழகிகள்
டிவிக்கள், ஆபாசப் புத்தகங்கள், விசிடிக்கள், ஆணுறைகள் என அனைத்து வசதிகளுடன் இந்த லாட்ஜின் பாதாளஅறை உள்ளது.

இப்போது இந்த லாட்ஜ் சீல் வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த லாட்ஜில் ஒரு பெண் கொலையும்நடந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X