For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழக்கறிஞரை மிரட்டிய புதுவை எம்.எல்.ஏவின் மகன்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதியின் மூத்த வழக்கறிஞரை மிரட்டியதாக,கோட்டுச்சேரி எம்.எல்.ஏ. நள மகராஜனின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிர் சுந்தரமூர்த்தி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார்வங்கிகளுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இந் நிலையில் கோட்டுச்சேரி எம்.எல்.ஏ. நள மகராஜனின் மகன் திருமுருகன் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியை அணுகிவங்கி ஒன்றிலிருந்து கடன் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு சுந்தரமூர்த்தி மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரை திருமுருகன் மிரட்டினார்.இதைத் தொடர்ந்து சுந்தரமூத்தி போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து எம்.எல்.ஏவின் மகன் திருமுருகன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X