பொறியியல் கல்லூரிகள்: முதல் செமஸ்டர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடக்கம்
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் அடுத்தமாதம் 4ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சுமூகமாக ஏற்கனவே திட்டமிட்ட காலஅட்டவணைபடி நடந்து வருகிறது.
இந்த மாதம்(ஜூலை) 27ந் தேதியுடன் கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது. இந்த கவுனசிலிங்கில் சுயநிதி என்ஜினீயரிங்கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்கள் நேரடியாக அந்த கல்லூரிக்கு சென்று சேர்ந்து கொள்ளலாம்.
ஆனால், சில சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரியில் முதல் செமஸ்டர் வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கப்போவதாக தகவல் கிடைத்து உள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிப்பதுஎன்னவென்றால், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் முதல் செமஸ்டர் வகுப்புகள் அடுத்த மாதம் 4ம் தேதிதான் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.