சிறையில் ரெளடிகளால் தாக்கப்பட்ட முல்லைவேந்தன் ஜாமீனில் விடுதலை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் இன்று காலைவிடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் வெடிகள்வெடித்துச் சிதறியதில் அப்பாவி வாலிபர் ஒருவர் இறந்தார். இதையடுத்து அக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தமுல்லைவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறைவான அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுசேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு அவரை ரெளடி வெல்டிங் குமார் தாக்கினான். கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு மீண்டும் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சேலம் சிறையில்பாதுகாப்பில்லை என்பதால் கோவை சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு முல்லைவேந்தன் மனு தாக்கல் செய்திருந்தார். இதைவிசாரித்த கிருஷ்ணகிரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் அவருக்கு கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கினார்.
இதையடுத்து இன்று காலை கோவை சிறையில் இருந்து முல்லைவேந்தன் விடுதலை செய்யப்பட்டார். சிறைக்குவெளியே நிருபர்களிடம் பேசிய முல்லைவேந்தன், என்னைக் கொல்ல தமிழக அரசு ரெளடிகளைப்பயன்படுத்தியது. அக் கும்பல் பயங்கர ஆயுதங்களால் என்னை சிறையில் வைத்துத் தாக்கியது என்றார்.
அதிமுகவில் சேர மறுத்ததால் தான் முல்லைவேந்தனை தமிழக அரசு ரெளடிகளைக் கொண்டு தாக்கியதாக திமுகதலைவர் கருணாநிதி ஏற்கனவே குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.