புதுவையில் பிரான்ஸ் குடியரசு தின விழா
பாண்டிச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் 216-வது குடியரசு தின விழா நேற்று புதுவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியான புதுவை, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகும் சில காலம்பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. அதன் பின்னர்தான் அது இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸின் அடையாளம் இன்னும் புதுவையில் நீக்கமற நிறைந்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தினம்,குடியரசு தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். புதுவையிலும் அந்த தினம் ராஜாக்கள் தினமாக விமரிசையாககொண்டாடப்படும்.
அதேபோல, நேற்று 216-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுவை முழுவதிலும் விளக்குஅலங்காரங்கள் காணப்பட்டன.
பிரெஞ்சுக் குடியுமை பெற்ற புதுவைவாசிகள் புத்தாடைகள் அணிந்து உற்சாகமாக காணப்பட்டனர்.
புதுவையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திலும் விழா நடத்தப்பட்டது. மேலும் கடற்கரையில் வானவேடிக்கைநிகழ்ச்சியும் நடந்தது.