ராஜகோபால் என்னை கொல்வேன் என மிரட்டினார்: ஜீவஜோதி
வேதாரண்யம்:
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தன்னைக் கடத்திக் கொலை செய்ய முயன்றதாக ஜீவஜோதி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜகோபாலின் கூட்டாளிகளால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டதாக வழக்குநடந்து வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு வேதாரண்யத்தில் உள்ள ஜீவஜோதியின் வீட்டில் புகுந்து தகராறுசெய்ததாக ராஜகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜீவஜோதி கூறுகையில், 15ம் தேதி இரவு ராஜகோபால், அவருடன் அவரது வக்கீல் மற்றும் வேறுசிலரும் எனது வீட்டுக்குள் நுழைந்தனர்.
என் குடும்பத்தினர் முன்னிலையில் என்னிடம், வரும் 21ம் தேதி வழக்கில் தனக்கு சாதகமாகச் சாட்சி சொல்லும்படிவற்புறுத்தினார்.
நான் அதற்கு மறுத்ததால், நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவாய் சாட்சி சொல்லவில்லை என்றால் உன் வீட்டுக்காரன்சாந்தகுமாருக்கு நேர்ந்த கதி தான் உனக்கும் ஏற்படும். உன் வீட்டுக்காரனை கொன்ற மாதிரியே, உன்னையும்கொன்னுடுவேன் என்று மிரட்டினர்.
இதைக் கேட்டு என் குடும்பத்தினரும் அக்கம் பக்கம் உள்ள எனது உறவினர்கள் அவரிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். உடனே ராஜகோபால் அவரது வக்கீல் மற்றும் உடன் வந்தவர்கள் கார்களில் தப்பிச் சென்றனர்.
என் கணவர் கொலை வழக்கில் நியாமான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கடைசி வரை அதற்காகபோராடுவேன். எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் தமிழக முதல்வர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
ஆனால், ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல ஜீவஜோதி தரப்பில் அதிக பணம் கேட்டதாகவும், அந்த பேரம்படியாததால் தான் வாக்குவாதம் ஏற்பட்டு ராஜகோபாலன் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
ஜீவஜோதியை கடத்தத் திட்டம்?
இதற்கிடையே ராஜகோபாலின் காரை வழியில் மடக்கிப் பிடித்த போலீசார் காரில் இருந்து மயக்க மருந்துபாட்டில்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஜீவஜோதியை காரில் மயக்கப்படுத்தி கடத்தஇவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் வசிய மருந்தும் இருந்ததாகத் தெரிகிறது. ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ராஜகோபால், யாரோஜோதிடர் சொல்லித் தான் ஜீவஜோதியை 3வதாக மணம் முடிக்க முயன்றார்.
அந்த ஜோதிடமிருந்து தான் வசிய மருந்தையும் ராஜகோபால் வாங்கி வந்திருக்கலாம் என்று தெரிகிறது.