For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோஷ்டிப் பூசலுக்கு முடிவு கட்ட சோ.பா.வுக்கு எம்.எல்.ஏ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று இளங்கோவன் மற்றும் வாசன்கோஷ்டியினருக்கிடையே நடந்த மோதல் தொடர்பாக விவாதிக்க உடனடியாக காங்கிரஸ் கட்சியின் அரசியல்விவகாரக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயக மூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.

வட சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லப்பா சத்திய மூர்த்தி பவனில் தாக்கப்பட்டதைக் கண்டித்துஅவர் தலைமையில் நேற்ற ஒரு பிரிவினர் சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் வாசன் கோஷ்டியினர். இவர்களுக்கு எதிராக இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்த சிலர்உண்ணும் விரதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு பிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது.

இந்த சம்பவம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏவான விநாயக மூர்த்தி, கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கு ஒருகடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது கட்சிக்குக் களங்கத்தைஏற்படுத்தும்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும். எனவே இது குறித்து விவாதிக்க கட்சியின் அரசியல்விவகாரக் குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார். விநாயக மூர்த்தி வாசன்கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X