For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா பல்கலை நிலத்தை அரசு ஆக்கிரமிக்கவில்லை: துணை வேந்தர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கஅனுமதிக்க மாட்டோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய தலைமைச் செயலகம் அரசுக்குச் சொந்தமான இடத்தில்தான்கட்டப்படவுள்ளது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

அதேபோல, அரசுக்குத் தேவையான சில ஏக்கர் நிலத்தை வழங்குமாறு எங்களுக்குக் கோரிக்கை வந்துள்ளது.அதை நாங்கள் கொடுக்கவுள்ளோம்.

மற்றபடி, அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில், அரசு ஆக்கிரமிப்பு எதையும் செய்யவில்லை.அப்படிச் செய்யவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை தமிழக அரசு உணர்ந்துள்ளது. எனவே உலகப் புகழ் பெற்றஅண்ணா பல்கலைக்கழக இடத்தை அரசு ஆக்கிரமிக்காது என்று நினைக்கிறேன்.

ராஜ்பவனுக்கு (ஆளுநர் மாளிகை) எதிரே உள்ள காலியிடத்தை அண்ணா பல்கலைக்கழக விஸ்தரிப்புத்திட்டத்திற்கு அரசு வழங்கவுள்ளது. இதுதொடர்பான உத்தரவு விரைவில் வெளியாகலாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X