பெங்களூரில் கொத்தடிமையாக இருந்த 11 பேர் மீட்பு: சேலத்தை சேர்ந்தவர்கள்
சேலம்:
பெங்களூரில் கொத்தடிமைகளாக இருந்த சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த 11 பேரை போலீஸார்மீட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் வீரப்பன் மற்றும் நஞ்சப்பன். இரு குடும்பத்தையும் சேர்ந்த 11பேர் பெங்களூர் அருகே நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தலா ரூ. 150 செலவுக்குத் தரப்படும். இதை வைத்துக் கொண்டு இவர்கள்குடும்பத்தை நடத்த வேண்டும். இந்த நிலையில் வீரப்பனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் அவர்பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கிருந்து தப்பி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தீவட்டிப்பட்டி போலீஸாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். தீவட்டிப்பட்டி போலீஸார், பெங்களூர் சென்று 11 பேரையும் மீட்டனர்.
பின்னர் அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அவர்களுக்குநிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.