தலித் என்பதால் மாயாவதி அரசை கவிழ்த்தது பா.ஜ.க
விழுப்புரம்:
மனுவாத சக்திகளின் சதியால், உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு விட்டதாகதிமுக விழுப்புரம் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில பேசிய தலைமைக் கழக முதன்மை செயலாளர் துரைருகன்,
மாயாவதி ஒரு சூத்திரர். அதனால்தான் அவரை சதி செய்து கவிழ்த்து விட்டனர். அதனால்தான் தாஜ்மஹால் அருகேகட்டடம் கட்ட அனுமதி கொடுத்த விவகாரத்தில் மிக வேகமாக செயல்படுமாறு சிபிஐயையும் தூண்டி விட்டுமாயாவதியை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
ஹரிஜனக் குடும்பத்தில் மாயாவதி பிறந்தது பிரம்மன் செய்த தவறு. அதற்காக அவரை இப்படியா பழிவாங்குவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார் துரைமுருகன்.
துரைருகனின் பேச்சு முழுக்க முழுக்க பா.ஜ.கவை குறி வைத்துத் தாக்குவதாகவே இருந்தது.
மிகவும் பகிரங்கமாகவே பா.ஜ.கவைத் தாக்கி துரைமுருகன் பேசியதைக் கேட்ட திமுக தொண்டர்கள், இனிமேல்பா.ஜ.கவுடன் திமுக கூட்டணி நீடிக்காது என்று பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது.
இந்தக் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தொண்டர்களிடம் இருப்பதை விழுப்புரம்மாநாட்டில் கண்கூடாகவே பார்க்க முடிந்தது.