For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 1,200 கோடியில் சென்னை அருகே உருவாகிறது துணை நிர்வாக நகரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ரூ. 1,200 கோடியில், 900 ஏக்கர் பரப்பளவில் துணை நிர்வாகநகரம் அமையவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமையவுள்ளது. இதைத்தொடர்ந்து அரசின் அனைத்துத் துறை அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு மாமல்லபுரம்அருகே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் தையூர் மற்றும் திருவிடைத் தாங்கல் ஆகிய ஊர்களில், 900 ஏக்கர்பரப்பளவில் ரூ. 1,200 கோடியில் துணை நிர்வாக நகரத்தை அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய துணை நிர்வாக நகரத்தில், அனைத்துத் துறைச் செயலாளர்கள் அலுவலகங்கள், காவல்துறைத் தலைவர்அலுவலகம், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் அலுவலகங்கள், இல்லங்கள் ஆகியவை அமையஉள்ளன.

இதுதொடர்பான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தையூர், திருவிடைத்தாங்கலில் புதியஅரசுத் திட்டங்களை மேற்கொள்வதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் யாரும் நிலங்களைவாங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாட்களில் துணை நிர்வாக நகரம் அமைப்பதற்கான டெண்டர் விடப்படவுள்ளது. அதன் பிறகுஇதுதொடர்பான பணிகள் முடுக்கி விடப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X