For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் ஆதரவாளர்களை அழிக்க ஜெ. முயற்சி: கண்ணப்பன்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தவறே செய்யாத என் மீது பொடா சட்டத்தை ஏவுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவது, அடக்முகுறையின்வெளிப்பாடுதான் என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் குற்றம் சாட்டினார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளை நான் தார்மீகமாகத்தான்ஆதரிக்கிறேன். ஆயுதமோ அல்லது பணமோ கொடுத்து உதவவில்லை.

தமிழர் ஆதரவு நடவடிக்கை எதையுமே ஜெயலலிதா ஆதப்பதில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போரைஅழித்தொழிக்க அவர் விரும்புகிறார்.

எம்.பியாகவும்,மத்திய அமைச்சராகவும், பதவியேற்றபோது நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை கிஞ்சித்தும்நான் மீறவில்லை. நான் என்ன அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி டான்சி நிலத்தை சுருட்டினேனா? சொத்துசேர்த்தேனா? ஊழல் செய்தேனா?.

ஜெயலலிதாவின் செயல்கள் அவரது அடக்முகுறை மனப்பான்மையின் வெளிப்பாடுகள் தான் என்றார்கண்ணப்பன்.

முன்னதாக நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களுக்கு எதிராக உலகில் எங்கு வன்முறைநடந்தாலும், அதற்காக குரல் கொடுக்க வேண்டியது உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களின் கடமை.

அந்த வகையில், இலங்கை இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்துவருகிறேன்.

மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பது விடுதலைப் புலிகள் மட்டும்தான்.இலங்கை அரசின் தமிழர் விரோத கொள்கைகளை கடந்த பல வருடங்களாக எதிர்த்துப் போராடி வருவது புலிகள்அமைப்பு மட்டும்தான்.

ஜெயலலிதா அரசின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க நான் தயார். புலிகளுக்கு இந்தியாவில் கிளைகள்கிடையாது. அவர்களுக்கு எந்த உதவியையும் நாங்கள் செய்யவில்லை. தார்மீகரீதியில் நாங்கள் வழங்கும்ஆதரவை அரசியல் உள்நோக்கத்தோடு ஜெயலலிதா பார்த்தால் பார்க்கட்டும் என்றார் கண்ணப்பன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X