For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நர்ஸின் அலட்சியத்தால் நடு ரோட்டில் பிறந்த குழந்தை

By Staff
Google Oneindia Tamil News

அரக்கோணம்:

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணை அலட்சியமாகத் திருப்பி அனுப்பினார்நர்ஸ். இதனால், அந்தப் பெண்ணுக்கு நடுரோட்டில் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அந்த நர்ஸ் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு, அலமேலு என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காகவந்துள்ளார். ஆனால், அவரை பரிசோதனை செய்து பார்த்த சாந்தி என்ற நர்ஸ், குழந்தை இப்போது பிறக்காது,வீட்டுக்குப் போங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்.

இதையடுத்து அலமேலுவை அவரது உறவினர்கள் மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால் வழியிலேயேஅவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு நடு ரோட்டில் வைத்து குழந்தை பிறந்தது.

இதையடுத்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன், அலமேலு கொண்டு வரப்பட்டார். இதுகுறித்துஅரசு மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் வஜ்ஜிரவேலுவிடம் புகார் தரப்பட்டது.

விசாரணை நடத்திய டாக்டர் வஜ்ஜிரவேலு, அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட நர்ஸ் சாந்தியை சஸ்பெண்ட்செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X