அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகள், கமல் படத்தில்:
அலங்காநல்லூர்:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரர்கள் முரட்டுக் காளைகளுடன் ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.
நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளுடன்மாடுபிடி வீரர்கள் ஆந்திரா விரைந்துள்ளனர்.
கமல் தயாரிக்கும் சண்டியர் என்ற படத்தின் படப்பிடிப்பை தேனி மாவட்டத்தில் தொடங்கிய போது இதற்கு கடும்எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஆந்திராவில் நடத்தப்பட்டது. பின்பு படப்பிடிப்பைபெயரிடாமல் வத்தலக்குண்டு பகுதியில் நடத்த திட்டமிட்டு அளைத்து ஏற்பாடுகளும் செய்தபின் ஏதோகாரணத்தால் அங்கும் படப்பிடிப்பு நடத்தப்பட வில்வை. படப்பிடிப்பு குழுவினர் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாகவிளையாடிய முரட்டுக் காளைகளையும் சிறந்த வீரர்களையும் படப்பிடிப்பு குழுவினர் தேர்வு செய்து ஆந்திராவில்நடைபெறும் படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றனர்.
அலங்காநல்லூர், பாலமேடு, பொதும்பு போன்ற பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளும் ஸ்ரீதர், அலும்புபோன்ற மாடுபிடி வீரர்களும் சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டி தலைவர் மோகன் தலைமையில் தனி வாகனத்தில்அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டு சென்றனர்.