அழகிரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை நகலை வாங்குவதற்காக மு.க. அழகிரிஇன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வராததால், இன்றும்நகல் வழங்கப்படவில்லை.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 பேர் மீதும் மதுரை 6-வது குற்றவியல்நீதிமன்றத்தில் போலீாசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதன் நகலைப் பெறுவதற்காக இருவாரங்களுக்கு முன்பே அழகிரி உள்ளிட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி வனிதாஉத்தரவிட்டிருந்தார்.
ஆனால், நிபந்தனை ஜாமீனில் பெங்களூரில் தங்கியிருக்கும் அழகிரியும் மேலும் ஒருவரும் வராத காரணத்தால்அறு குற்றப் பத்திரிக்கை நகல் தரப்படவில்லை.
இதையடுத்து இன்று அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார். இதையடுத்துஅழகிரி உள்ளிட்ட 12 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால், பாண்டியன் என்பவர் மட்டும்ஆஜராகவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 3ம் தேதி அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று கூறிய நீதிபதி வனிதாஅன்றைய தினம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.