புதுவைப் பெண்ணின் "டப் டப்" சாதனை!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் சுபா, தொடர்ந்து 36 மணி நேரம் கம்ப்யூட்டரில் டைப் அடித்து சாதனைபடைத்துள்ளார்.
பாண்டிச்சேரி முதலியார்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சுபா, மில் தொழிலாளி கலியமூர்த்தி என்பவரது மகள். அஞ்சல்வழியில் பி.காம் படித்து வரும் சுபா கம்ப்யூட்டர் நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
அத்தோடு நில்லாமல், கம்ப்யூட்டர் மூலம் ஏதாவது சாதனை படைக்க எண்ணினார். இதையடுத்து குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் எழுதிய இந்தியா விஷன்-2020 என்ற புத்தகத்தை 36 மணி நேரத்தில் டைப் அடித்துமுடிக்க முடிவு செய்தார்.
இந்த டப் டப் சாதனை நிகழ்ச்சியை, செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்குத் தொடங்கினார். இரவு பகலாகதொடர்ந்து டைப் அடித்த சுபா, புதன்கிழமை இரவு 9.20 மணிக்கு தனது டைப்பிங்கை நிறுத்தினார்.
300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில், 235 பக்கங்களை அடித்து அடித்திருந்தார் சுபா. இது ஒரு இந்தியசாதனையாகும்.
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இதற்கு முன்பு, 31 மணி நேரத்தில் 202 பக்கங்கள்அடித்ததே சாதனையாக இருந்து வந்தது. அதை சுபா தற்போது முறியடித்துள்ளார்.