கூட்டணியை விட்டு விலகுவது குறித்து யோசிக்க வைத்தது யார்?: கருணாநிதி கேள்வி
சென்னை:
கொடுத்த வாக்குறுதிகளை மீறியதால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்துயோசிக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுஅலுவலகங்கள் முன்பு திமுக சார்பில் நடத்தப்படவுள்ள அறப்போர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துநடத்தப்படும் போராட்டம் அல்ல.
திமுகவின் கொள்கையை விளக்குவதற்காகவே இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவுள்ளோம். இது கூட்டணிதர்மத்துக்கு எதிரானது என இல.கணேசன் சொன்னால் அது உண்மையாகிவிடாது.
கூட்டணியில் இருந்தாலும் கோரிக்கை முக்கியமா, கூட்டணி முக்கியமா என்றால் எங்களுக்கு கோரிக்கை தான்முக்கியம். தமிழை செம்மொழியாக்க வேண்டும், நர வேட்டையாடும் பொடாவை வாபஸ் பெற வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்.
(கூட்டணி) தர்மம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அதை இல.கணேசன் போன்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
நக்கீரன் கோபாலுக்குக் கிடைத்த ஜாமீனை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதைப் பார்க்கும்போது, பொடாசட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது என்றார் கருணாநிதி.