For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடை செய்யப்பட்ட தமிழ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுப. இளவரசன் கைது?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் சுப. இளவரசன் சேலத்தில் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவரை ரகசியஇடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் தொண்டர்களை கொண்ட தமிழ் தீவிரவாத அமைப்புதமிழர் விடுதலை இயக்கம். இந்தப் பகுதியின் முந்திரிக் காடுகளில் ரகசியமாய் இயங்கி வருகிறது இந்த இயக்கம்.

இந்த இயக்கத்தை தமிழக அரசு தடை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இயக்கத்தின் தலைவர் சுப. இளவரசன்உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இளவரசனை சுட்டுப் பிடிக்கவும் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், சுப.இளவரசன் சேலத்தில் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்தில் உள்ள ஒரு வழக்கறிஞரின் வீட்டில் இளவரசன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்குசிறப்பு அதிரடிப்படை போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு வைத்து இளவரசன் மடக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பிடிபட்ட சுப. இளவரசனிடம் ரகசிய இடத்தில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறைக் காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் மற்றும் பெரம்பலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருவதாகவும்கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X