For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிநீர்ப் பிரச்சனை: திருவாரூர், பெரம்பலூரில் மக்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

திருவாரூர்:

குடிநீர் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் மக்கள் சாலைமறியலிலும் காலி குடங்களை உடைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர்ப் பிரச்சினை மிகக் கடுமையாகஉள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஊராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் ஏற்படவில்லை.

இதையடுத்து முத்துப்பேட்டை ஊராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள்முற்றுகையிட்டனர். குடிநீர் வழங்கக் கோரி கோஷமிட்ட அவர்கள் பின்னர் காலிக்குடங்களை அலுவலக வாசலில்போட்டு உடைத்தனர்.

இதேபோல, பெரம்பலூரிலும் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருச்சி-சேலம்நெடுஞ்சாலையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தியதால் சுமார் ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X