திமுகவில் களமிறங்கும் இன்னொரு வாரிசு!
சென்னை:
திமுக சார்பில் நடைபெறவுள்ள விழாவில், மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசுகிறார். இதன் மூலம் திமுகவில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் ப்பெரும் விழா வரும் 30ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் முரசொலிஅறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குகருணாநிதி பரிசுகள் வழங்குகிறார்.
இந்த விழாவிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில், அறக்கட்டளைஅறங்காவலர் என்ற முறையில் தயாநதி மாறனும் கலந்து கொண்டு பேசுகிறார்.
அறங்காவலர் என்ற முறையில் தயாநிதி பங்கேற்றாலும், தற்போதைய சூழ்நிலையில் அவர் திமுக விழாவில் கலந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
முரசொலி மாறன் இனி எழுந்து நடமாட வாய்ப்பு குறைந்துவிட்டதால், தந்தையின் வழியில் தயாநிதி தன்னைதிமுகவில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.
தயாநிதி உள்பட மாறனின் குடும்பத்தினர் இதுவரை திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதே இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. திமுக நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்துவிட்டுப் போய்விடுவதுஅவர்கள் வழக்கம்.
இப்போது மாறனின் குடும்பத்தில் இருந்து ஒரு வாரிசு திமுவுக்குள் புகுத்தப்படுகிறது.