டி.ஆர்.பாலு குறித்து கராத்தே பேச்சு: திமுக, காங். கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குறித்து அதிமுகவைச்சேர்ந்த துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. அப்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது தொகுதிமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டிய கட்டடம் ஒன்றை மாநகராட்சி திறக்காமல் இழுத்தடித்து வருவது குறித்துதிமுக கவுன்சிலர் மா.சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.
அப்போது டி.ஆர். பாலு குறித்து சில கருத்துக்களை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந் நிலையில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டுவந்த கராத்தே தியாகராஜன் அவை அனைத்தும் நிறைவேறியதாக அறிவித்தார்.
விவாதமே நடத்தாமல் அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேறியதாக கராத்தே அறிவித்தைக் கண்டித்த திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
கோவை மாவட்ட ஊழியர்களைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்ட ஊழியர்களிடம்விசாரணை நடக்கவுள்ளது.