For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெளரவ ரேசன் கார்டு: "எச்" முத்திரை குத்த மேலும் 1 மாதம் அவகாசம் !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மாத வருவாய் ரூ. 5,000க்கு மேல் உள்ளவர்கள், தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாகமாற்றிக் கொள்வதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள், வருமான வரி கட்டுவோர் ஆகியோர் தங்களது ரேஷன்கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது ரேஷன் கார்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து அதில் எச்முத்திரை குத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான மக்கள் தங்கள்கார்டுகளில் எச் முத்திரை குத்திக் கொள்ளத் தயாராக இல்லை.

இதையடுத்து ரேசன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மிரட்டல் கொடுக்கப்பட்டது. ஆனாலும்மக்களிடையே அரசின் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தான் நிலவி வருகிறது.

இந்தக் கெடு முடிவடைய 2 நாட்களே பாக்கி இருந்த நிலையில் தற்போது காலக் கெடுவை அரசு நீட்டித்துள்ளது.

இன்னும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளதால், அக்டோபர் மாத இறுதி வரை காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X