கொத்தடிமைகள்: குஜராத் கொண்டு செல்லப்பட இருந்த 20 இளம் பெண்கள் மீட்பு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து குஜராத்திற்கு வேலைக்காக கொண்டு செல்லப்படவிருந்த 20 இளம்பெண்களை ரயில்வே போலீஸார் மீட்டனர்.
நெல்லை மாவட்டத்திலிருந்து ஏராளமான இளம் பெண்கள், வறட்சி காரணமாக வெளி மாநிலங்களுக்குவேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அனைவரும் குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கேஅழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அங்கு அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் வறுமை காரணமாக தங்களதுமகள்களை அனுப்ப இளம் பெண்களின் பெற்றோர்களே சம்மதம் கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் குஜராத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதற்காக நெல்லை மாவட்டம் மாராந்தை, புதூர்பகுதிகளைச் சேர்ந்த 20 இளம் பெண்கள் ரயில் மூலம் மும்பை செல்வது தெரியவந்தது. இதையடுத்து உஷாரானநெல்லை ரயில்வே போலீஸார் அவர்களை ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை மும்பைக்கு அழைத்துச் சென்ற 2 ஏஜென்டுகளும் பிடிபட்டனர். இவர்களை சொந்த ஊர்களுக்குத்திருப்பி அனுப்ப போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.