மசூதி இடிப்பு: ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்காலத் தடை
லக்னெள:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யஉத்தரவிட்ட ராய்பரேலி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
மேலும் ராய்பரேலி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜோஷி மீதான விசாரணைக்கும் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் துணைப் பிரதமர் அத்ாவனி, மத்திய அமைச்சர் ஜோஷி, உமா பாரதி,வி.எச்.பி. தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ராய்பரேலி நீதிமன்றத்தில்நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் அத்வானி விடுவிக்கப்பட்டார். இதற்கு அவர் மீதான குற்றச்சாட்டை சிபிஐசரியான முறையில் நீதிமன்றத்தில் விளக்காதது தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த வழக்கில் ஜோஷி மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அப்போது பிரதமர் வெளிநாட்டில்இருந்தார். இதனால் ராஜினாமா உடனடியாக ஏற்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு டெல்லி திரும்பிய பிரதமர் வாஜ்பாயை ஜோஷி சந்தித்துப் பேசினார்.அப்போது ஜோஷி ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்றும், ராய்பரேலி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் ஜோஷி மேல் முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும், அவர் மீதான விசாரணையைத் தொடரவும்இன்று இடைக்காலத் தடை விதித்தது.
ஜோஷியின் மேல் முறையீட்டு மனு மீது வரும் நவம்ர் 4ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.
ஜோஷியின் மேல் முறையீட்டு மனு மீது வரும் நவம்ர் 4ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.
இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டவுடன் அது குறித்து பிரதமர் வாஜ்பாய், ஜோஷியுடன் தொலைபேசியில்பேசினார். நீதிமன்றத்தின் தடை மகிழ்ச்சியளிப்பதாக பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
மசூதி இடிப்பு: தப்பினார் அத்வானி- சிக்கிய ஜோஷி ராஜினாமா